Pages

29 July 2009

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 2 வயது குழந்தையை கொன்ற கள்ளக்காதல் ஜோடி கைது


விளாத்திகுளத்தில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 2 வயது குழந்தையை கள்ளக்காதல் ஜோடியினர் அடித்தே கொலை செய்துள்ளனர். விளாத்திகுளம் அடுத்த நாகலாபுரம் பஜனை மட தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரி(25). இவர்களுடைய மகள் புனிதா(2).

மாரீஸ்வரி சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் காத்தாரிமுத்துவுக்கும் (43), மாரீஸ்வரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனையறிந்த முருகன் மனைவியை கண்டித்தார். ஆனால் மாரீஸ்வரி திருந்த வில்லை. ஏற்கனவே திருமணமான காத்தாரி முத்துவுடன் கள்ளக்காதல் நீடித்தது.

அதையடுத்து மாரீஸ்வரி கடந்த 3 மாதத்துக்கு முன்பு மகள் புனிதாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காத்தாரிமுத்துவுடன் சேர்ந்து தனிக்குடித்தனம் நடத்த தொடங்கினார்.

குழந்தை புனிதா அடிக்கடி அழுதது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கள்ளக்காதல் ஜோடி கருதியது. இதனால் 2 பேரும் அடிக்கடி புனிதாவை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மயங்கிய நிலையில் காணப்பட்ட புனிதாவை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கள்ளக்காதல் ஜோடி கொண்டு சென்றது.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து நாகலாபுரம் கிராம நிர்வாக அதிகாரி சந்தனமாரி அளித்த புகாரின் பேரில் குழந்தை மர்மமாக இறந்ததாக விளாத்திகுளம் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தை புனிதா வின் உடல் பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முடிவில் உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக கருதி காத்தாரிமுத்துவும், மாரீஸ்வரியும் சேர்ந்து புனிதா வை அடித்து சித்ரவதை செய்ததும், அதில் குழந்தை இறந்ததும் தெரிய வந்தது.

அதன் பேரில் காத்தாரி முத்து, மாரீஸ்வரி ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

உல்லாச வெறியில் 2 வயது குழந்தையை கள்ளக்காதல் ஜோடி அடித்துக் கொன்ற சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு கண்ணு இல்லை, கள்ள காதலுக்கு இதயம் இல்லை

2 comments:

நிலாமதி said...

இவள் தாயே அல்ல .........இவளுக்கு அந்த குழந்தாய்க்கு தாயாய் இருக்கும் தகுதியே இல்லய். எத்தனி பேர் "இல்லயே ஒரு பிள்ளை" என்று இருக்க ...இப்படியுமா. அரக்க குணம்,.

Anonymous said...

enna nelamathi unakku sex inna ennanu thereyuma....ennudan va namma oppam...my no 9030436393

Post a Comment