Pages

28 July 2009

ஆங்கிலம் பேசி தப்பித்த சீனா பெண்


வீட்டில் புகுந்த திருடனிடம் இருந்து, ஆங்கிலம் தெரிந்ததால் பெண் தப்பினார்.சீனாவில் தலைநகர் பீஜிங்கில் உள்ள சவோயங் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறியிருந்தார். வீட்டை பார்க்க விரும்புவதாக ஒருவர் வந்தார். அவருக்கு அந்த பெண் வீட்டை சுற்றி காட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென கத்தியை எடுத்து வீட்டில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுக்கும்படி மிரட்டினான்.


அந்த நேரத்தில் பெண்ணின் வீட்டு ஃபோன் மணி அடித்தது. உடனே, வெளிநாட்டில் இருந்து முக்கியமான வியாபாரம் விஷயமாக பேச ஃபோன் வந்திருப்பதாகவும், பேச அனுமதிக்கும்படியும் திருடனிடம் அந்த பெண் கெஞ்சினார். சரியென்று திருடன் அனுமதித்தான்.
ஃபோனில் பேசிய பெண், எதிர்முனையில் பேசியவரிடம் தனது வீட்டில் திருடன் புகுந்திருக்கும் விஷயத்தை ஆங்கிலத்தில் கூறி, போலீசுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். திருடனுக்கு ஆங்கிலம் தெரியாததால் நடந்த விஷயம் தெரியவில்லை. அடுத்த சில நிமிடங்களில் பெண்ணின் வீட்டை போலீஸ் சுற்றிவளைத்து, திருடனை கைது செய்தது.

No comments:

Post a Comment