Pages

18 June 2009

சுமை தூக்கும் தொழிலாளி இந்திய கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5000


ராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(31). இவரது மனைவி மாலதி. 2 மகன், ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. தற்போது திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கும் முத்துராமலிங்கம், காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.தொடர்ந்து ‘தேவதையை கண்டேன்’, ‘தித்திக்குதே’, ‘பிரியமான தோழி’ படங்களில் நடித்தார்.


இவர், கடந்த மே 8ம் தேதி ‘இந்தியாவின் கடனை அடைக்க’ என்று குறிப்பிட்டு ரூ.5,000க்கு டி.டி. எடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார். அதை பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்துக் கொண்டனர்.

அவருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.100 முதல் 150 வரை சம்பளம் பெறும் இவர், நாட்டின் கடனை அடைக்க பணம் அனுப்பியுள்ளார்.

இதுபற்றி முத்துராமலிங்கம் கூறுகையில்,‘ நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.30,000ம் கடன் உள்ளது என்று பத்திரிகையில் படித்தேன். எனவே, சேமித்த பணத்தை, கடனை அடைக்க என்று எழுதி பிரதமருக்கு அனுப்பினேன்’ என்றாது.
இதில் நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்துகின்றனர். திருமணத்துக்கான ஏற்பாடுகளை விஜயகுமார், அவரது மனைவிகள் மஞ்சுளா, முத்துக்கண்ணு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Thanks தினகரன்

1 comment:

Vijay Anand said...

//சுமை தூக்கும் தொழிலாளி இந்திய கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5000//
//தற்போது திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கும் முத்துராமலிங்கம், காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.தொடர்ந்து ‘தேவதையை கண்டேன்’, ‘தித்திக்குதே’, ‘பிரியமான தோழி’ படங்களில் நடித்தார்.//

Something wrong this article , kindly check.

Post a Comment