இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாலை 4 மணிக்கு மக்கள் எழுச்சிப் பேரணி நடைபெற்றது.
சென்னையில் நடந்த பேரணிக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், ஜி.கே.மணி, இயக்குநர் சீமான்,இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் முதலானோர் கலந்துகொண்டனர்.
அழுது அழுது வீங்கிப்போன முகத்துடனேயே காணப்பட்டார் வைகோ. சோகமாகவே இருந்த வைகோ எழுச்சிப்பேரணியின் முடிவில் பேசும்போது, ‘’பா.நடேசனையும், அவரது மனைவியையும் கொன்றுவிட்டார்களே’’ என்று கதறி அழுதார்.
ராஜபக்சேவை ஆத்தரத்துடன் திட்டித்தீர்த்தார்
No comments:
Post a Comment