Pages

25 March 2009

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தனி தெலுங்கானா - மாயாவதி

காங்கிரஸ்- பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோது தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மறுத்து விட்டது. ஆனால் இப்போது ஓட்டுக்களை பெறுவதற்காக அந்த கட்சிகள் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம் என்று கூறுகின்றன. அதையாரும் நம்பவேண்டாம்.

நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்போம். காங்கிரஸ் கட்சியில் அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது. விலைவாசி உயர்வு விண்ணை எட்டி உள்ளது.

நகர்ப்புறங்களில் வீட்டு மனை, வீட்டு வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தவறிவிட்டன. இவற்றால் நடுத்தரவர்க்க மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த மந்திரிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புஊழல்பூ மந்திரிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment