Pages

03 May 2011

கோடையில் எவ்வளவு குடிநீர் அருந்தலாம்?

கோடையில் எவ்வளவு குடிநீர் அருந்தலாம் என்பது பற்றி டாக்டர் சகுந்தலா கூறியதாவது:-
 
கோடையில் ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். நமது உடல் 60 சதவீத நீரால் ஆனது. தவிர நம் உடலின் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கு நீர் அவசியம். நம் உடலில் தினமும் உண்டாகும் கழிவுகளை சிறுநீர், வியர்வை மூலம் நீக்க, ரத்த ஓட்டம் சீராக இருக்க, சிறுநீர்க் குழாய்களை கழுவி விட்டு அவற்றில் கிருமிகள், கசடுகள், கற்களின் முன்னோடியான படிகங்கள் சேராமல் இருக்க என்று பல அவசியங்களுக்கு குறைந்த பட்சம் நீர் தேவைப்படுகின்றது. நம் உடலில் நீரின் அளவு தேவையை விடக் குறையும் போது பல உறுப்புகள் வேலை செய்ய முடியாமல் தளர்ந்து விடும்.
 
சிறுநீர், வேர்வை, சுவாசம், மலம் மூலமாக உடலில் இருந்து நீர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டே இருக்கின்றது. இவற்றில் நம் சிறுநீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலம் சிறுநீரகங்கள் நம் உடலில் நீரின் சமச்சீர் தன்மையை நிர்வகிக்கின்றன. 12 வயதிற்கு மேல் அனைவரும் சராசரியாக 1? லிட்டர் சிறுநீர் கழிக்கின்றனர்.
 
இதை சரிகட்ட அனைவரும் குறைந்த பட்சம் 3 1/2 லிட்டர் நீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவ கழகம் ஆண்கள் குறைந்த சட்சம் 4 லிட்டர் நீரும் பெண்கள் 3? லிட்டர் நீரும் அருந்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றது. சிறுநீர் வெளிர் மஞ்சள் அல்லு நிறமின்றிப் போனால் நீங்கள் குடிக்கும் நீரின் அளவு சரியென்று அர்த்தம்.
 
அடர் மஞ்சள் நிறத்தில் போனால் குடிக்கும் நீரின் அளவு குறைவு என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்பவர்கள் மேற்சொன்னதை போல 1 1/2 மடங்கு அதிகம் நீர் அருந்த வேண்டும். வெயில் காலத்தில் அதிகம் வேர்க்கும் சமயத்திலும் அதிக நீர் குடிக்க வேண்டும். காய்ச்சல், வாந்தி, பேதி வந்தால் நீர் வேறு வழிகளில் வீணாகி உடலில் நீரின் அளவு குறையும். இந்த சமயங்களில் நீர் அதிகம் குடிக்க வேண்டும்.
 
தர்பூசணி, வெள்ளரிக் காய் போன்ற காய்கறிகள் அநேகமாக மொத்த எடையும் நீரால் ஆனவை. பால், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை நீர், சர்பத் ஆகியவை நீர் மிகுந்தவை. அவை உடலிற்கு நீர்ச்சத்தை கொடுக்கும் வெயில் காலங்களில் அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.
 
கோடையில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்: உடல் எடை, சத்து குறையும், சோர்வு ஏற்படும், மயக்கம், தலைவலி உண்டாகும். சிறுநீர் குறைவாக அடர்த்தியாக போகுதல், நிறுநீரங்களில் அடிக்கடி கிருமித்தாக்கம், கற்கள் ஏற்படும்.
 
இத்தகைய சிறுநீரக தொந்திரவுகள் அதிக அளவு நீர் குடித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தினமும் சுமார் 2 லிட்டர் சிறுநீரேனும் பிரியும்படி தேவையான அளவு நீரைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அக்னி நட்சத்திரகாலத்தில் அடிக்கடி நீர் அருந்தி இந்த பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார் டாக்டர் சகுந்தலா.

No comments:

Post a Comment