Pages

05 January 2010

பெண்கள் தொடும்போது `சிலிர்ப்பு' ஏற்படுவது ஏன்?


பெண்கள் தொட்டால் பூ மட்டுமல்ல; ஆண்களின் உள்ளமும் மலர்கிறது. அது ஏன் என்று ஆன்டரியாவில் உள்ள மெஸ்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.

இந்த ஆராய்ச்சியில் 100 கல்லூரி மாணவிகள் உட்படுத்தப்பட்டனர். அவர்களை, சில ஆண்களை தொட வைத்து, அந்த ஆண்களுக்குள் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்றும் அப்போது சோதிக்கப்பட்டது. மேலும், அந்த மாணவிகள் தங்களை தொட்ட மாத்திரத்தில் அத்தனை ஆண்களும் சிலிர்த்துப் போனார்கள். சில ஆண்களின் ரோமங்கள்கூட சிலிர்த்துக்கொண்டு எழுந்து நின்றன.

இதைத்தொடர்ந்து, அந்த மாணவிகளின் கை விரல்களில் அப்படி என்னதான் இருக்கிறது? என்று துருவித் துருவி ஆராய்ந்தார், ஆய்வை மேற்கொண்ட நரம்பியல் நிபுணர் டேனியல் கோல்டுரிக்.

அப்போது, பெண்களின் விரல் நுனியில் அந்த `சிலிர்ப்பு' ரகசியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சாதாரணமாக பெண்களின் விரல் நுனியானது ஆண்களின் விரலை விட மிக மென்மையாகவும், குட்டையாகவும் இருக்கிறது. இதனால்தான் இவர்கள் ஒரு ஆணைத் தொடும்போது, அந்த ஆணுக்கு திடீர் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

இந்த ஆய்வில் பெண்களுடன் பங்கேற்ற ஆண்கள் கருத்து தெரிவிக்கும்போது அவர்களில் பலர் வெட்கத்தால் நெளிந்து போனார்கள். சிலர், அந்த மாணவிகள் தங்களை தொட்டபோது செக்ஸ் உணர்வு ஏற்பட்டதாக வெளிப்படையாகவே சொன்னார்கள்.

No comments:

Post a Comment