Pages

05 January 2010

தூங்கும்போது கணவனுக்கு தீ வைத்த இளம்பெண் கைது

கருவாட்டுக் குழம்பு தகராறில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள நெரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(28). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி (26). தனியார் ஏற்றுமதி நிறுவன தொழிலாளி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். 2ம் தேதி வளர்மதி வேலைக்கு சென்று விட்டு இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பினார். நாளைக்கு வயலில் வேலை இருப்பதால் கம்பெனிக்கு செல்ல வேண்டாம் என கோபால் கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த நாய் கருவாட்டுக் குழம்பை கொட்டி விட்டது. கோபால் ஆத்திரமடைந்தார். மகள் கவுசல்யாவை (9) அடித்தார். குழந்தையை ஏன் அடிக்கிறாய்? என வளர்மதி கண்டித்தார். வாய்த் தகராறு உச்சக்கட்டம் அடைந்தது. இரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் கோபால் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார் வளர்மதி. லுங்கியில் தீப்பிடித்ததும் கோபால் அலறியடித்து எழுந்தார். மீதமுள்ள மண்எண்ணெய்யையும் ஊற்றியதால், அவரது முகம், உடல், வயிறு கருகியது. தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோபால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் இதை தெரிவித் துள்ளார். வளர்மதியை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment