Pages

12 October 2009

ராஜபக்சேவை பழிவாங்காமல் விடமாட்டார்கள்: ராமதாஸ்


வன்னி வதை முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூரில் ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ’’இலங்கை அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் நாங்கள் இறக்கப்போகிறோம் எங்களை விடுவியுங்கள் என்று அவர்களை பார்க்க சென்றவர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

இலங்கைக்கு பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் போயிருந்தால் அந்த குரல்களை பதிவு செய்து சொல்வார்கள்.

முன்பைவிட இப்போது ஈழத் தமிழர்கள் வெகுண்டு எழுந்துள்ளார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சவை பழிவாங்காமல் விடமாட்டோம் என்ற நிலையில் உள்ளனர். என்ன பழி என்றால் தமிழ் ஈழம் மலர்வது தான். இதை நோக்கி தாய் தமிழர்களுடைய பயணம் இருக்க வேண்டும்.

நிச்சயமாக தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் இல்லையா என்று கேட்கிறார்கள். அந்தவகையில்தான் தொடர் முழக்க போராட்டம் செய்தோம்.

இதேபோல் தொடர்ந்து நம்முடைய பயணம் இருக்கும். இதை பற்றி இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவோம்’’ என்றார் ராமதாஸ்.

No comments:

Post a Comment