14 October 2009
பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு ரெயில் டிக்கெட் இன்று ஆரம்பம்
பொங்கல் பண்டிகை
ரெயில்களில் பயணம் செய்ய 3 மாதங்களுக்கு முன்னரே (90 நாட்களுக்குள்) டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
வருகிற ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஜனவரி மாதம் 12-ந் தேதிக்கு சாதாரண நாட்களில் இயக்கப்படும் ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதற்காக, காலை 3 மணி முதலே சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட தமிழகம் முழுவதிலும் உள்ள ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட நிரம்பி வழிந்தது.
தற்போது, ஏராளமானோர் ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதால், வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போய் விடுவதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment