Pages

14 September 2009

இதயேந்திரன் இதயம் நின்றது !

சென்னை அடுத்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் இதயேந்திரன் (17). கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடந்த ஒரு விபத்தில், இதயேந்திரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதயேந்திரனின், உடல் உறுப்புக்களில், அவனது இதயம், சென்னை முகப்பேரில் உள்ள செரியன் மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, பெங்களூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அபிராமி (9) என்ற சிறுமிக்கு பொருத்தப்பட்டது.

அறுவை சிகிச்சை நடந்து ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறலால், அபிராமி கடும் அவதிப்பட்டு வந்தாள். இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செரியன் மருத்துவமனையில் அபிராமி மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு 8 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

1 comment:

hotv said...

மகிழ்ச்சி நீடிக்கவில்லையே

Post a Comment