Pages

13 September 2009

சச்சின் தெரிவித்த யோசனை


ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெரிவித்த யோசனையை சோதித்து பார்க்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் டுவண்டி/20 போட்டிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒருநாள் போட்டிக்கான 100 ஓவரை 25 ஓவர்களாக பிரித்து 2 இன்னிங்ஸாக விளையாடலாம் என்று நட்சத்திர வீரர் சச்சின் சில தினங்களுக்கு முன் யோசனை தெரிவித்திருந்தார். இதற்கு கபில்தேவ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) இந்த யோசனையை ஏற்க முடியாது என்று அறிவித்தது.

இந்நிலையில், ஐசிசி கிரிக்கெட் மேலாளர் டேவ் ரிச்சர்ட்சன் லண்டனில் கூறியதாவது:
சச்சினின் யோசனை பகல்&இரவு ஆட்டங்களுக்கு சிறப்பாக இருக்கும். 2 இன்னிங்ஸாக விளையாடுவதால் பேட்ஸ்மேன்களுக்கு சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருக்காது. இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனினும், இந்த மாதிரி சோதனைகளை சர்வதேச கிரிக்கெட்டில் சோதித்து பார்க்க முடியாது. முதலில் உள்ளூர் போட்டிகளில் சோதித்து பார்க்கலாம். இந்த சோதனையில் வெற்றி கிடைத்தால் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ரிச்சர்ட்சன் கூறினார்

No comments:

Post a Comment