Pages

05 August 2009

என்றும் இளமைக்கு இனிமையான வழிகள்


நம்பினால் நம்புங்கள் இவருக்கு வயது 46

நாற்பது வயதில் நாய்க்குணம்Õ என்று பாட்டிகள் ஆரூடம் சொன்னது உண்மைதான் போல. இளமைக்கு டாட்டா சொல்லும் தருணம் அது! இளமையை வழியனுப்பி வைப்பதென்றால் வலிக்கும்தான். படித்து, வேலை தேடி, நல்ல சம்பளம் வரட்டும் என்று காத்திருந்து 30க்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் அப்போதுதான் இரண்டாம் வகுப்பைத் தாண்டியிருக்கும்.இன்னும் வாழவே ஆரம்பிக்கலையோÕ என்கிற பயம் கவ்வும்.

போதாக்குறைக்கு, சம்பளம் உயரல, சொந்த வீடு கட்டல என அடுக்கடுக்கான கவலைகள் சிலந்தி வலை மாதிரி மூளையை தூங்கவிடாமல் இம்சிக்கும். அதுவரை நோயைப் பார்த்து, எதிர்த்து நின்ற உடம்பு அதன்பிறகு சொன்ன பேச்சைக் கேட்காது. சர்க்கரை நோய், இதயக்கோளாறு, ரத்தக் கொதிப்பு, நரம்புத்தளர்ச்சி என ஏதாவது வந்து தொற்றிக்கொள்ளுமோ என்ற கவலை இன்னொரு பக்கம். 40 வயதைத் தொட்டவர்களிடம் கொஞ்ச நேரம் காது கொடுத்துப் பாருங்கள்... மனசுக்குள் அடைந்து கிடக்கிற எல்லாவற்றையும் கொட்டிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்.

�சில விஷயங்கள் நடந்தே தீரும். எவ்வளவு யோசித்தாலும் அதை நம்மால் மாற்ற முடியாதுÕ என்பதால், கவலைப்படுவதை முதலில் நிறுத்துங்கள். உங்களை குழப்பிக் கொண்டிருக்கும் கவலைகளை பட்டியலிடுங்கள். தேவையில்லாததை கழித்துக் கட்டுங்கள். 80 சதவிகிதம் கவலைகள் காலியாகியிருக்கும். இப்போது மிச்சம் இருக்கிற 20 சதவிகிதம் பிரச்னைகளை எப்படி சமாளிக்கலாம் என யோசியுங்கள். இப்படித்தான் வாழ்க்கையை சுலபமாக்க வேண்டும். கண்ணாடி உங்கள் தோற்றத்தில் வயதைக் காட்டலாம். கவலைகளை ஓரங்கட்டினால் மனம் குழந்தையாக மாறிவிடும்.

அப்படி என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? முகத்தில் வயதின் முதிர்ச்சி, �இனிமேல் நான் சுருங்கிவிடுவேன்Õ என்று எச்சரிக்கை கொடுக்கிற தோல், தலைமுடியில் சில வெள்ளிக் கம்பிகள், வயிற்றை விட்டு எட்டிப் பார்க்கும் தொப்பை, உறவில் ஆர்வம் குறைதல், சில சுகவீனங்கள்... அட, இவ்ளோதானே!

80 வயதிலும் கிண்டலும் கேலியுமாக வலம் வரும் பெரிசுகளை நீங்கள் பார்க்கலாம். எதையும் ஈசியாக எடுத்துக் கொண்டால் எல்லோருக்கும் அந்த இளமை வாய்க்கும். உடம்பை நோய் தாக்க வரும்போது, மன வலிமை எதிர்த்து நின்று ஜெயிக்கும்.



நாற்பது வயதைத் தாண்டிய பிறகும் இளமையோடு வாழ வழிகள் சொல்கிறார் சேலம் எஸ்.கே.எஸ் மருத்துவமனை குடும்ப நல மருத்துவர் ப்ரியா விஜய்.

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் 40 வயது ஒரு வேகத்தடை. கடந்த நாட்களை திரும்பிப் பார்க்கவும், நம்மை பற்றி சிந்திக்கவும் ஏற்ற தருணம் இது. மனம், உடல் ரெண்டும் மாறிப் போயிருக்கும். தொப்பை வெளியில் தள்ளி, இடுப்பு பெருத்துவிடும். கண்ணுக்குக் கீழே சதை விழும். கன்னம் லூசாகி, முடி நரைக்க ஆரம்பித்திருக்கும். இளமை அதற்குள் போய்விட்டதே என்று கவலை வரும். இந்த மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் மன அழுத்தம்.

நாற்பது வயதைத் தொடுவதற்கு முன்பே வாழ்க்கையை முறைப்படுத்தி, சத்தான உணவு, தேவையான உடற்பயிற்சி, மனப்பயிற்சி என்ற பழக்கத்திற்கு கொண்டு வந்து விட்டால் 50 வயதில் கூட சுறுசுறுப்பாக இயங்கலாம். இதெல்லாம் சொல்வதற்கு சுலபம். மணிக்கணக்கில் உட்கார்ந்த இடத்தில் வேலை. வாரத்தில் நான்கு நாட்கள் கடையில் சாப்பாடு, மனம் விட்டுப் பேச யாரும் இல்லை, வீட்டுக்குள் வந்தால் �அது இல்லை, இது இல்லைÕ என்று நச்சரிப்புகள், இதை மறக்க சிகரெட், வாரத்துக்கு ஒரு தடவையாவது நண்பர்களுடன் ட்ரிங்ஸ்... பெரும்பாலான ஆண்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கிறது. இது சரியில்லை என்று தெரிந்தாலும், �சவுகரியமாக இருக்கிறதுÕ என்கின்றனர்.

வாழ்க்கையே இவர்களுக்கு டென்ஷன் மயம். இந்த மன அழுத்தம் உடலை பாதிக்கிறது. இப்போது இளம் வயதிலேயே பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம். இதனால் எந்த வேலையையும் திருப்தியாக முடிக்க முடிவதில்லை. வீட்டில் இருப்பவர்களிடம் சுமுகமான உறவு இருக்காது. பகிர்ந்து கொள்ளாத பிரச்சினைகள் மனதை அழுத்தும். மன அழுத்தம் பல நோய்களுக்கு கதவைத் திறந்து விடுவதால், முதலில் அதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். உடலுக்கும், மனதுக்கும் இதமான பயிற்சிகள் அவசியம்.

டென்ஷனில் இருந்து விடுபட, செய்ய வேண்டியது மூச்சுப்பயிற்சி. நன்றாக மூச்சை இழுத்து விட்டால் நரம்பு, தசை, மூளை ஆகியவற்றில் ரத்த ஓட்டம் சீராகும். உடல் திசுக்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கும். மனதும் புத்துணர்ச்சி அடையும். சோர்வாக இருக்கும்போது, நன்றாக மூச்சை இழுத்து விட்டு ஆழமாக சுவாசித்தால் மாற்றத்தை உணரலாம். யோகா, தியானம், மென்மையான இசையை ரசிப்பது... என முறையாக செய்து வந்தால் உடல் உற்சாகமாக இருப்பதற்குத் தேவையான உந்துசக்தி கிடைக்கும்.

காலையில் எழுந்த உடன் நடைப்பயிற்சி செய்யலாம். பிரச்னைகளை நம்பகமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மன அழுத்தத்தை குறைக்க, உணவிலும் கவனம் தேவை. கொழுப்பைத் தவிர்த்து விட்டு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள காய்கறி, கீரை, பழங்களை கட்டாயம் உணவில் சேர்க்கவும். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட, தவறான உணவுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தால், அவர்கள் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படலாம்.

இந்த வயதில் அசைவ உணவை நிறுத்துவது நலம் தரும். புகை, மதுவுக்கு குட்பை சொல்லவும். வயது ஆக ஆக, நினைவாற்றலும் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும், இயல்பாக ஏற்படும் இப்படிப்பட்ட குறைகளை நம்மால் தள்ளிப்போட முடியும். ஞாபக மறதியை 70 வயது வரை கூட தள்ளிப்போட முடியும். இதற்கும் முதல் எதிரி மன அழுத்தம் தான்.

நம் உடம்பில் மூளைதான் இயக்குனர். மற்ற பாகங்களை விட மூளை செயல்பாட்டுக்கு 30 சதவிகிதம் அதிக ரத்தம் தேவை. இதில் ரத்தநாளங்கள் அதிகளவில் இருப்பதால், சிறிய அழுத்தம் கூட மூளையை பாதிக்கும். ரத்த அழுத்தம் மூளையை பாதிப்பதால் பக்கவாதம் வருகிறது. மூளைக்கு ஆக்சிஜன் போதுமான அளவிற்கு கிடைத்தால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கும். மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு 40 வயதுக்கு மேல் குறைய ஆரம்பிக்கும். இதை சரிக்கட்ட பதற்றம், படபடப்பு, மனஅழுத்தம் ஆகியவை தாக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் வைட்டமின் பி சத்து, மூளை செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும்.

பொதுவாக இந்த வயதில் ஆண்களுக்கு உடலுறவில் விருப்பம் குறையலாம். சர்க்கரை, இதயக் கோளாறு, அதிக எடை போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, மன அழுத்தமும் சேர்ந்து கொண்டு இதில் பிரச்னை பண்ணும். மேலும், ஏற்கனவே இருக்கும் உடல் தொந்தரவுகளுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும் விருப்பத்தைக் குறைக்கலாம். வீட்டில் மனம் விட்டுப் பேசி மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தூக்கமின்மை, அதிகமாக மது அருந்துவது ஆகியவற்றாலும் உறவில் ஆர்வம் குறையலாம். ஆனால், இதன் விளைவாக உடலுறவில் திருப்தி ஏற்படாமல் பயம் அல்லது குற்ற உணர்வு ஏற்படும். இதுவே தவறான தொடர்புகள் ஏற்படவும் காரணம். மனதை ஆரோக்யமாக வைத்துக் கொண்டால் சிறிய பிரச்னைகளை ஊதித் தள்ளலாம்.

சரி... இவையெல்லாம் 40 வயதுக்கு மேல் வராமல் தடுக்க வேண்டும் என்றால், 30 வயதிலிருந்தே உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். வேலைக்கு தகுந்த மாதிரி உடலுக்கு ஓய்வும் தேவை. உயரத்துக்கு தகுந்த வெயிட் போதும். ஏற்கனவே இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கவும், எடையைக் குறைக்கவும், பித்தப்பை பிரச்னையை தவிர்க்கவும் முறையான உடற்பயிற்சி அவசியம். இதுவே தசை மற்றும் திசுக்களை வலுப்படுத்தும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் டாக்டர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும். பொதுவாக, வாக்கிங் மற்றும் சைக்கிளிங் போன்ற பயிற்சிகள் எல்லோருக்கும் ஏற்றது.

உணவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேர்ப்பதை குறைக்கவும். பச்சைக் காய்கறிகள், கீரை தினசரி உணவில் அவசியம் இடம்பெற வேண்டும். அதே போல் புரதச் சத்துள்ள உணவுகளாக பார்த்துப் பார்த்து சாப்பிடவும். வாயைக் கட்டினால் வெயிட்டை குறைப்பது சுலபம். பொதுவாக இந்த வயதில் பெண்களைப் போல ஆண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதே போல் விஷயங்களை எதார்த்தமாக அணுகுவதும் ஆண்களின் பலம். தோல் சுருக்கம் விழுவதிலிருந்து தப்பிக்க உணவு, பயிற்சி, மனதுடன் சிறப்பு கவனமும் கை கொடுக்கும். வாசனைத் திரவியங்கள் மற்றும் அதிக வாசனை உள்ள சோப்புகளில் இருக்கும் கெமிக்கல்கள் உங்கள் தோலுக்கு எதிரி. தோலின் தன்மைக்கு தகுந்த அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பது முக்கியம்.

இன்றிலிருந்து ஒவ்வொரு நாளையும், அன்று பிறந்த குழந்தை போல அணுகுங்கள். தனக்கு வாய்த்திருப்பதை ஏற்றுக் கொண்டு வாழப் பழகுங்கள். எல்லாவற்றையும் உங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றுங்கள். கவலையா? அப்படின்னா? என்று உற்சாகத்துடன் கிளம்புங்கள். நம்மால் வெல்ல முடியாதது எதுவும் இல்லை.

No comments:

Post a Comment