இந்து நாளிதழ் ஆசிரியர் ராமைக் கண்டித்து சென்னை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களில், சிங்கள கைக்கூலி தமிழ் இன எதிரி, இந்து ராமே தமிழகத்தை விட்டு ஓடு.
ஈழத் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்கும் ராஜபக்சே வதைமுகாம்களை நியாயப்படுத்தும் இந்து ராம் போன்ற கும்பலை விரட்டியடிப்போம்.
ஈழத் தமிழருக்கு அகதி முகாம்கள் அல்ல தமிழ் ஈழமே தீர்வு என போராடுவோம் என்று கூறப்பட்டிருந்தது.
சிங்கள அரசு அமைத்துள்ள மின் வேலி கம்பிகளால் சூழப்பட்டுள்ள முகாம்களை, தமிழகத்தின் அகதிமுகாம்களை விட இலங்கை அரசின் ராஜபக்சே அமைத்துள்ள அகதி முகாம்கள் சிறப்பாக உள்ளதாக இந்து நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இதைக் கண்டித்தே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment