Pages

06 May 2009

சோனியாகாந்திக்கு கறுப்பு கொடி - பழ.நெடுமாறன்


புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

இது குறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ‘'இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து வாய் திறக்காத காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் தமிழகம் வர உள்ளார்.

இதை கண்டிக்கும் வகையில் அவருக்கு எதிரான கறுப்புகொடி ஆர்ப்பாட்டம் 6-ந் தேதி (இன்று) மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகில் நடைபெறும். தமிழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவிக்க வர வேண்டுகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment