Pages

18 May 2009

கோஷ்டிப் பூசலால்தான் தோல்வி: கே.வீ.தங்கபாலு

சேலம் மக்களவைத் தொகுதியில் தான் தோல்வியடைந்ததற்கு கோஷ்டிப் பூசலும் ஒரு காரணம்' என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

கோஷ்டிப் பூசல். மக்களுக்கு பரிச்சயமான முகங்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நிலைப்பாடு உண்டு. பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக தோல்வி ஏற்பட்டுள்ளது. அந்தத் தோல்விகளை ஆராய்ந்து சரிசெய்ய முயற்சி எடுப்போம்.

சேலம் தொகுதியில் நான் (தங்கபாலு) தோல்வி அடைந்ததற்கு கட்சிக்குள் நிலவிய கோஷ்டிப் பூசல் உள்ளிட்டவை காரணங்கள் ஆகும். அதுகுறித்து, அறிக்கை பெறப்படும். மேற்கு மண்டலத்தில் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பிரித்துள்ளது.

பாமகவுக்கு பாடம். தேர்தலில் பாமகவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்த அந்தக் கட்சி தேர்தல் நேரத்தில் வெளியேறி எங்களுக்கு துரோகம் செய்தது' என்றார் தங்கபாலு.

No comments:

Post a Comment