இலங்கை: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இடமபெயர்ந்து வாழும் மக்கள் பட்டினி அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர் என வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உணவுத் தட்டுப்பாட்டு நிலையிலும் உமிக்குள் நெல் பொறுக்கி மக்கள் இன்று தவிட்டை மட்டும் கரைத்துக் குடிக்கின்ற மிக மோசமான பட்டினி அலவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வன்னி மீது சிறீலங்கா சிறீலங்கா அரசு உணவையும், மருந்தையும் போர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றமை நிலைமையில் அந்த மக்கள் ஒரு வேளையேனும் கஞ்சியை உணவாக எடுத்துக்கொண்டனர். அதனையும் இன்று இழந்து தவிட்டைக் கரைத்துக் குடிக்கும் நிலை வன்னி மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment