Pages

18 April 2009

ஈழத்தமிழருக்காக கரூரைச்சேர்ந்த சிவானந்தம் சென்னையில் தீக்குளிப்பு


கரூரைச்சேர்ந்த ஆ.சிவானந்தம்(46). சென்னை வடபழனியில் உள்ள தேர்தல் ஆணையம் முன்பு போர் நிறுத்தம் செய்யுங்கள்- ஈழத்தமிழரை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கையை உரக்க எழுப்பியபடி தீக்குளித்தார்.

அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கே அவர் அவசர பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நச்சுக் குண்டுகளை வீசி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவே தீக்குளித்தேன் என்று மருத்துவமனையில் காவல்துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவருக்கு உடலில் 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீக்குளித்த இளைஞர் சிவானந்தத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து தமிழ்நாட்டில் முத்துக்குமார் தொடங்கி ஏற்கெனவே 12 பேர் தீக்குளித்துள்ளனர்.

நன்றி நக்கீரன்

No comments:

Post a Comment