Pages

29 April 2009

ஐசிஎல் கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை நீக்கம்: பிசிசிஐ


மும்பை, ஏப்.29: இந்திய கிரிக்கெட் லீக் வீரர்கள் மீதான தடையை நீக்க பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது.

ஐசிஎல்லில் உள்ள வீரர்களில் சிலர், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களை சந்தித்து, லீகில் இணைந்ததன் மூலம் தவறுபுரிந்துவிட்டதாக ஒப்புக்கொண்டதாகவும், இதையடுத்து லீக் வீரர்கள் மீதான தடையை நீக்குவது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் தெரிவித்தார்.

எனினும் ஐசிஎல்லிருந்து விலகும் வீரர்களுக்கு ஒரு வருடம் வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாட அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் உடனடியாக விளையாடத் தொடங்க வேண்டும் என்றும் மனோகர் கூறினார்.

'மே 31க்குள் விலகும் வீரர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐக்குத் திரும்பும் வீரர்களை வரவேற்கிறோம்' என பிசிசிஐ செயற்குழு கூட்டம் முடிந்தபின்னர் மனோகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment