Pages

24 March 2009

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து கங்குலி நீக்கம்?


ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து கங்குலி நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி, சர்வதேச போட்டிகளி லிருந்து ஓய்வு பெற்று விட்டார். எனினும் ஐபிஎல் போட்டிகளில் அவர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

இதனிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் கங்குலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கங்குலியின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை.

இந்நிலையில், கங்குலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. கொல்கத்தா அணி சார்பில் கருத்து தெரிவித்துள்ள மேலாளர் ஜான் புக்கனன் கேப்டன் பதவி பற்றி இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது, இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பெங்களூர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ராகுல் திராவிட் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பீட்டர்சன் கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து கங்குலி நீக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:

Post a Comment