Pages

16 March 2009

ஓய்வுக்கு பின் வாழ்க்கை எப்படி - அனில் கும்ளே


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வாழ்க்கை மிகவும் அமைதியான முறையில் சென்று கொண்டிருப்பதாக அனில் கும்ளே தெரிவித் துள்ளார்.

இந்திய அணியில் 18 ஆண்டுகாலமாக அசைக்க முடியாத சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் கும்ளே. டில்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஒரே இன்னிங் சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத் தவர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொட ரில் காயமடைந்த கும்ளே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தனது கிரிக்கெட் அனு பவம் குறித்து கும்ளே கூறியது: நான் முதலில் மித வேகப்பந்து வீச்சாளராகத் தான் கிரிக்கெட் வாழ்க் கையை துவக்கினேன். சில சீனியர் வீரர்கள் எனது பவுலிங் குறித்து சந்தேகம் தெரிவித்தனர். அப்போது எனது சகோதரர் தினேஷ் “லெக் ஸ்பின்’ பந்து வீச்சிற்கு மாறுமாறு கருத்து தெரிவித்தார். அவரது கருத்தை ஏற்றபிறகு தான் லெக் ஸ்பின்னராக மாறி னேன். ஒருசில நேரங்களில் இரவில் விழிக்கும் போது நான் எப்படி விக்கெட்டு கள் வீழ்த்தினேன் என்பதை எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். களத்தில் எடுக்கும் முடிவுகளை எப்போதும் சக வீரர் களிடமும், மற்றவர் களிடமும் பகிர்ந்து கொள் வேன். துரதிருஷ்டவசமாக எனக்கு ஏற்பட்ட காயத் தால் சர்வதேச போட்டி களில் இருந்து விலக நேரிட்டது.

ஓய்விற்கு பிறகு வாழ்க்கை அமைதி யாக சென்று கொண்டு உள்ளது. மறுநாள் காலை யில் எழுந்திருக்கும் போது பந்து வீச வேண்டிய வேலை இல்லை என்பது வித்தியாசமான உணர்வாக இருந்தது. இருப்பினும் கிரிக்கெட் தொடர்பை விட்டுவிட மாட்டேன். இவ்வாறு கும்ளே தெரிவித்தார்.

No comments:

Post a Comment