
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண பொருட்கள் திரட்டப்படும். இந்த நிவாரண உதவிகள் அனைத்தும் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேரும்.
இதேபோல புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்கு உதவிப் பொருட்கள் திரட்டப்படும்.
சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா. சபை மூலம் இலங்கை தமிழர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தால் அது அரசியல்.
நெடுமாறன் சேர்த்த பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தால கொடுக்க மறுத்த காங்கரஸ்.
இப்போது இவர்கள் செய்வது என்ன?
No comments:
Post a Comment