Pages

12 March 2009

8 கோடி தமிழர்கள் இருந்தும் பயனில்லை- நடிகர் சத்யராஜ் பேச்சு


திருவண்ணாமலை ஜீவா வேலு பள்ளியின் 7-வது ஆண்டு விழா நேற்று மாலை நடந்தது, அவ்விழாவில் நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது.

இங்கு பரிசு பெற்றவர்கள் தங்கள் முழுதிறமையையும் பயன்படுத்தி அதற்கான தகுதியை பெற்றுள்ளனர். ஆஸ்கார் விருது என்பது கனவாக இருந்தது. அதை ஏ.ஆர்.ரகுமான் நனவாக்கி இருக்கிறார். விருதை பெற்ற அவர் வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசினார். அவர் தமிழில் பேசியதுதான் பெருமை. அவருடைய இசையில் பாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது.

மேலும் நமது நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினையில் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும். இலங்கை யில் 3 லட்சம் தமிழர்கள் சாகடிக்கப்படுகின்றனர், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர், பசி பட்டினியால் சாகின்றனர்.

8 கோடி தமிழர்கள் இருந்தும் அவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் நாம் தமிழர்கள் என்று சொல்வதற்கு தகுதி இல்லை. எனவே அனைவரும் குரல்கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment