Pages

19 February 2009

சீமான் இன்றோ அல்லது நாளையோ கைது செய்யப்படுவார் - ஆற்காடு வீராசாமி

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் பேசினார் அப்போது டைரக்டர் சீமான் எல்லா பொதுக்கூட்டங்களிலும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுகிறார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயாதது ஏன்? மற்றும் தொல்.திருமாவளவனும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருகிறார். இவர் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயவேண்டும். யாருக்கோ பயந்து இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளதா? தமிழ்நாட்டில் அமைதி ஏற்படவும், காங்கிரசாரை பாதுகாக்கவும், விடுதலைப்புலிகள் ஆதரிக்கப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஞானசேகரன் பேசினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி

டைரக்டர் சீமான் புதுச்சேரியில் 12-2-09 அன்று பேசியது தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்காக 5 தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் சீமான் இன்றோ அல்லது நாளையோ கைது செய்யப்படுவார் என்றார்.

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Post a Comment