Pages

20 February 2009

அடுத்த முட்டை அடி யாருக்கு? தமிழகம் தழுவிய கருத்துக்கணிப்பு முடிவுகள்--நகைச்சுவை

சுபிரமணிய சாமிக்கு முட்டை வெற்றிகரமாக அடித்ததை தொடர்ந்து, அடுத்த முட்டை திருவிழா பற்றியே தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்ப்பாக தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கருத்துக்க் கணிப்பில் துக்லக் ஆசிரியர் சோ , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர்களுக்கு அடிப்பதற்கான முட்டைகள் தயாராக இருப்பதாகவும் , தகுந்த நேரத்தில் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் , சுவாமிக்கு அடித்தது போலவே வெற்றிகரமாக திட்டம் நிறைவேற்றிவைக்கப்படும் என்று முட்டை அடித்தல் திட்டக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதே வேளை இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த சு.சுவாமி எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும்.

தொடர்ந்தும் அவர் இனியும் தொடர்ந்து தங்க பாலு , சோ போன்றோரும் என்போல பதிக்கப் பட்டால் , அவர்களுடன் கூட்டணி வைத்து , பாதிக்கப்பட்ட எல்லோரும் மண் மோகன் சிங்கை சந்தித்து மர்கஜர் கொடுக்க டெல்லி பயணமா இருப்பதாக தெரிவித்தார்.

தன் மேல் நடத்தப்பட்ட முட்டைவீச்சுக்குக் காரணம் ஐஎஸ்ஐதான் என்று சு.சுவாமி தலைமறைவு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது -

சித்தம்பரம் தீட்சிர்ஸ்க்கு ஆதரவா நான் மனுதாக்கல் செய்ய போனுது. அப்போ வக்கீல்ஸ் முட்டைல என்ன தாக்னாங்க. அந்த முட்டைஸ் எங்கர்ந்து வந்த்துதுனு என்க்கு தெர்யும். எல்லாம் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்லே சீக்ரட்டா நடத்துற ஒரு கோலி பண்ணேல இர்ந்து வந்தது. ஐஎஸ்ஐ மூல்மா இந்த்யாவுக்குள்ளே மும்பை வழ்யா சப்ளை ஆகியிருக்கு. முட்டே கடத்துன எல்லாவங்க பத்தியும் எல்லா டீடெய்லும் என் லேப்டாப்லே இருக்கு. இதுபத்தி எனக்கு ஏற்கென்வே ஒபாமா தக்வல் கொட்த்துட்டார்.

எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.

நூறு வாத்து முட்டே, வன்னிலே இர்ந்து ராமேஸ்வர்ம் வள்யா சப்ளை ஆகிருக்கு. அது சோ தலேல எர்யறதுக்காகன்னு என்க்கு காஞ்சி மட்லேர்ந்து இன்பர்மேஷ்ன் வந்த்ருக்கு. சோ, ஜாக்ரதயா இர்க்கணும்னு கேட்டுக்றேன்.’

இவ்வாறு அவர் தன் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி:முகில்,ஹரன்

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2419:2009-02-19-17-20-57&catid=50:time-pass&Itemid=110

2 comments:

Anonymous said...

இவர்கள் மேல் முட்டைகளை எறிந்து முட்டைகளை அவமானப்படுத்தாதீர்கள்

Anonymous said...

முட்டை பெற முயலுவோர்
சோமாரி
இந்து நரசிம்ம ராம்
தினமல நாய்கள்.

Post a Comment