Pages

06 February 2009

காதலர்தினத்துக்கு நாங்கள் ரெடி - ஸ்ரீராம் சேனா எச்சரிக்கை.


காதலர்தினம் கொண்டாடும் ஜோடிகளை பிடித்து கட்டாய திருமணம் செய்து வைப்போம் என ஸ்ரீராம் சேனா தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னால் கர்நாடக மாநிலம் மங்களூரில் இரவு கேளிக்கை விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் மீது ஸ்ரீராம் சேனா ஆமைப்பினர் சிலர் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மகளிர் அமைப்புகளும், இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக், துணைத் தலைவர் பிரசாத் அட்டவார் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளிவந்துள்ள முத்தலிக் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

காதலர் தின கொண்டாட்டம் இந்திய பண்பாட்டுக்கு எதிரானது என்பதால் அதை நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறோம். மேலும் பெங்களூரில் காதலர் தின கொண்டாட்டங்கள் நடைபெறும் ஓட்டல்கள், கல்லூரிகள் முன்பு ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். என்றும், காதலர் தினத்தை கொண்டாடும் ஜோடிகளையும், டேட்டிங் [Dating] செல்வர்களையும் எங்கள் தொண்டர்கள் பிடித்து அருகில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறினார்.

மேலும் இதற்க்காக ரகசிய கேமராக்களுடனும் கூடிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்களுடன் புரோகிதர் ஒருவரும் செல்வார் என்று தெரிவித்தார்.

Now Ram Sene getting ready for Valentine's Day

அட நம்ம காதலர்கள் ரெம்ப உசாருங்கோ......

2 comments:

Anonymous said...

வேலையில்லா அம்பட்டருங்க இவனுங்க பூனைக்கு அலையுரானுங்க.

மணிகண்டன் said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment