Pages

07 February 2009

பீட்டர்சன், பிளின்டாப் தலா ரூ. 7.6 கோடிக்கு ஏலம்.



இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பு, டி20 போட்டித் தொடர்களை நடத்தி வருகிறது. ஐபிஎல் 2-வது சீசன் போட்டி வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக வீரர்கள் ஏலம் கோவாவில் 06-Feb காலை நடந்தது.

கடந்தாண்டு நடந்த முதல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ். டோணியை 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இவர் தான் ஏலத்தில் அதிகம் விலை போனவராவார்.

ஆனால் ஐபிஎல் 2-வது சீசன் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பிளின்டாப், பீட்டர்சன் தலா 7.6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். பிளின்டாபை சென்னை சூப்பர் கிங்சும், பீட்டர்சன்னை பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் வாங்கியுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் என்ற பெருமை இவர்களுக்குக் கிடைத்துள்ளது,


மேலும் ஸ்டுவர்ட் கிளார்க், பிராட் ஹாடின், தென் ஆப்ரிக்காவின் பிரின்ஸ், சர்வான், கபுகேதரா, குலசேகரா, ஆன்ட்ரு நெல் உள்ளிட்ட சில வீரர்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல மாடு உள்ளூர்ல விலை போகாதுங்க!

Pietersen and Flintoff fetch record prices in IPL

No comments:

Post a Comment