Pages

30 January 2009

தமிழக அரசின் நிதி உதவி வேண்டாம் - முத்துக்குமார் குடும்பம்

இன்று சட்டசபையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். ஆனால் அரசின் இந்த நிதி உதவியை முத்துக்குமாரின் தங்கை கணவர் ஏற்க மறுத்துவிட்டார் என்று தெரிகிறது.

மேலும் நம் உணர்வை காட்டத்தான் உயரை விட்டார், அதற்காக பணம் கொடுத்து எங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று முத்துகுமாரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.

முத்துக்குமாரின் உடல் அடக்கம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்தது. ஆனால் முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில்..’என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுகள் என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதே கருத்தை அஞ்சலி செலுத்த வந்த திரைப்பட இயக்குநர் சேரனும் தெரிவித்தார். இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

No comments:

Post a Comment