Pages

07 January 2009

சத்யம் கம்ப்யூட்டர் டெக் மஹிந்திராவுடன் இணைப்பா?

மும்பை: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை டெக் மஹிந்திராவுடன் இணைப்பதாக வந்த மீடியா வதந்திகளை நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் கூரிவுள்ளது

இதுகுறித்து இன்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமான செபிக்கும் முறையான விளக்கம் தந்துள்ளது சத்யம் நிறுவனம்.

இந்த வதந்திகளால் சந்தையில் சத்யம் மற்றும் டெக் மகிந்திராவின் பங்குகளின் மதிப்பு உயர்ந்தன.

இதுகுறித்து சத்யம் நிறுவனம் கூறியிருப்பதாவது:

ஒரு வர்த்தக நாளிதழின் இன்றைய பதிப்பில், டெக் மஹிந்திரா நிறுவனம் முழுமையாக சத்யம் நிறுவனத்துடன் இணையப் போகிறதென்று செய்தி வெளியாகியிருந்தது. மேலும் ஹெச்பி, ஐபிம், மைண்ட்ரீ நிறுவனங்களும் சத்யம் நிறுவனத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை, என்று சத்யம் விளக்கம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment