Pages

10 September 2009

ராகுல் காந்தி வருகையை கண்டித்து விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழீழ மண்ணில் சிங்கள இனவாத அரசின் செயலை நியாப்படுத்தும் காங்கிரஸ் கட்சியையும் தமிழகத்திற்க்குவருகை தரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியையும் கண்டித்து விழுப்புரத்தில் தமிழ் இளைஞர் கூட்டமைப்பு தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் மாவட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் விழுப்பரையனார் தலைமை தாங்கினார் மார்ச்சிய பெரியாரிய பொது உடமைக் கட்சியை சார்ந்த ஆ.கு. ஆறுமுகம் பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்த ம.கணேசன் தமிழ் இளைஞர் கூட்டமைப்பு சார்ந்த கோ பாபு பா.ஜோதி நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தமிழியக்கம் எழில்இளங்கோ பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்த அய்யனார், வழக்கறிஞர் லூஸி, வழக்கறிஞர் ரஸ்கின் ஜோசப் , காளிதாஸ், தமிழ் இளைஞர் கூட்டமைப்பை சார்ந்த லலித்குமார் ,சதக்கத்துல்லா ,ஈழ ஆதரவாளர் குழு கோ.கணேசன் எ.சி.கே.பிரேம் , பிரபு .வி தமிழ் இளைஞர் கூட்டமைப்பு , தமிழ் இளைஞர் கூட்டமைப்பு சார்ந்த சீனி.தங்கராசு நிகழ்ச்சியை நெறிப்படுத்தி நன்றி உரையாற்றினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலானோர் பிரபாகரன் பனியனுடன் பங்குபெற்றனர்.

No comments:

Post a Comment