உண்மை சம்பவம் - உசார்
பத்தாம் வகுப்பு படிக்கும் சென்னை மாணவி. காலையில் தந்தை பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வேலைக்கு செல்வார். மாலையில் வேலை முடிந்துவரும் தாயார் பள்ளியில் இருந்து அவளை வீட்டிற்கு அழைத்து வருவார். தாயார் வேலை முடிந்துவர ஒருசில நாட்கள் தாமதமானால், அதுவரை அவள் பள்ளி அருகிலே காத்திருப்பாள்.
மகளின் வயிறு பெரிதாகிக்கொண்டே செல்ல, தாயாருக்கு சந்தேகம். கேட்டதற்கு சில மாதங்கள் மாதவிலக்கு வரவில்லை என்றாள். அவள் கர்ப்பமாகியிருப்பது தாயாருக்கு தெரிந்துவிட, இரண்டொரு நாட்கள் பின்தொடர்ந்து கண்காணித்தபோது, பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு அவள் செல்வது தெரிந்தது. பின்தொடர்ந்து பிடித்தபோது அகப்பட்ட நபருக்கு வயது 42. இரண்டு குழந்தைகளின் தந்தை. அவர்தான் அந்த 15 வயது மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம். பள்ளியில் இருந்து தூரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பம் கலைக்கப்படுகிறது.
-எப்படி நடந்தது?
டாக்டர் கேட்டபோது, "கல்யாணம் செய்துகொண்ட பின்பு உறவு கொண்டால் மட்டுமே கர்ப்பம் ஆகும் என்று நினைத்துவிட்டேன்..''-என்று வெகுளியாக சொன்னாள், அந்த மாணவி.
1 comment:
mudinthal ipathivai parkkavum,sexual harrasment in www.kanavupathivugal.blogspot.com
Post a Comment