Pages

19 July 2009

யானையைப் பற்றி அறிவோம்


யானை வரும் பின்னே மணியோசை வரும் பின்னே என்ற பழமொழி எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.

யானையைப் பற்றி சொல்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

அவற்றில் சில

யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை. (அடடா எலும்பு இல்லாமலேயே இவ்வளவு வலிமையா என்று வியப்பாக உள்ளதா?)

யானைக்கு கிட்டப்பார்வை மட்டும்தான் உள்ளதாம். (நாம இனிமே கொஞ்சம் தூரமாகவே நின்னுக்குவோம் என்ன)

இந்தியப் பெண் யானைகளுக்குத்தான் தந்தம் கிடையாது. ஆனால் ஆப்ரிக்க பெண் யானைகளுக்கு தந்தம் உள்ளது.

பொதுவாகவே பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதே கிடையாதாம்.

யானைகளுக்கு என்று ஒரு மருத்துவமனை கேரளா‌வி‌ல் உள்ளது.

யானை‌யி‌ன் இர‌ண்டு த‌ந்த‌ங்களு‌ம் சம அள‌வி‌ல் இரு‌ப்ப‌தி‌ல்லை.

யானை‌க்கு‌ட்டி‌க்கு 3 முத‌ல் 5 வயது‌க்கு‌ள் த‌ந்த‌ம் முளை‌க்‌கிறது.

No comments:

Post a Comment