Pages

24 June 2009

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, டோனி எச்சரிக்கை


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய துணை கேப்டன் ஷேவாக்கின் தோள்பட்டை காயம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஷேவாக் தனது காயத்தை மறைத்தார் என்றும், அதனால் அவர் மீது இந்திய கேப்டன் டோனி அதிருப்தியில் அடைந்தார் என்றும் தகவல்கள் வெளியாயின.

இந்த நிலையில் அணி வீரர்களை டோனி கடுமையாக எச்சரித்து இருக்கிறார். வீரர்கள் காயத்துடன் இருந்தாலோ, காயம் அடைந்தாலோ அல்லது தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலோ அதை எந்த காரணத்தை கொண்டும் மறைக்க கூடாது. அணியின் நலனை கருத்தில் கொண்டு காயம் பற்றி ஒளிவு மறைவின்றி என்னிடமோ அல்லது கிரிக்கெட் வாரியத்திடமோ தெரிவித்து விட வேண்டும். ஏனெனில் இது போன்ற நிலைமையில் ஆடும் போது அது அணியையும் பாதித்து விடும் என்ற தனது தோழர்களை அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும் ஓய்வு தேவை என்று விரும்பும் வீரர்கள் அதனை தெரியப்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் வீரர்களிடம் டோனி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment