13 May 2009
தென்காசி காங்., வேட்பாளர் மீது தாக்குதல்
தென்காசி: தென்காசி காங்., வேட்பாளர்மீதும் அவரது, கார் மீதும் புதிய தமிழகம் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர், இடையன்புதூர் என்ற பகுதியில் கள்ள ஓட்டு போடுவதாக வந்த தகவலை அடுத்து, காங்., வேட்பாளர் வெள்ளைபாண்டியன் பூத்திற்குள் சென்று பார்வையிட்டார். அப்போது, புதிய தமிழகம் கட்சியினர் காங்., சார்பில் கள்ளஓட்டு போடப்படுவதாக கூறி அவரை தாக்கினர். மேலும், அவரது காரையும் அடித்து நெருங்கினர். இதுகுறித்து வெள்ளைபாண்டி தெரிவிக்கும்போது, கள்ளஓட்டு போடுவதாக வந்த தகவலை விசாரிக்க வந்த என்னை, புதிய தமிழகம் கட்சியினர் தாக்கினர். எனது காரையும் அடித்து நெருக்கினர். இங்கு கள்ளஓட்டு போடப்படுவதால், நிச்சயம் இங்கு மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment