Pages

17 February 2009

சுப்ரமணிய சாமி மீது முட்டை வீச்சு,அடி, உதை


சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வக்கீல்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். மேலும் அவர் மீது அழுகிய முட்டை, தக்காளி வீசப்பட்டது

சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது.

இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து, தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று மனு தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்றத்திற்கு வந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.கே. மிஸ்ரா, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களது ஹாலுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் அங்கிருந்த காவல்துறையினரை வெளியே போக சொல்லிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.

பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வக்கீல்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். அடி வாங்கிய சுப்பிரமணியம் சுவாமிவெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர். அழுகிய முட்டைகளை எடுத்து சுவாமியின் முகத்தில் வீசியடித்தனர். அழுகிய தக்காளிகளையும் வீசினர்.

இதனால் உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு சில வக்கீல்கள் விரைந்து வந்து சுவாமியை மீட்டு அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரமணிய சுவாமி இப்படி தாக்கப்படுவது முதல் முறையல்ல. அ.தி.மு.க. ஆட்சியின்போது ஜெயலலிதாவுக்கு எதிராக பல வழக்குகளை போட்ட அவரை, அ.தி.மு.க.வினர் அங்கங்கே தாக்கும் சம்பவங்கள் நடந்தேறின. நடுரோட்டில் அவர் முன்னே, அ.தி.மு.க. மகளிர் அணியினர் கூடி அசிங்கப்படுத்திய நிகழ்வும் நடந்தது

No comments:

Post a Comment