05 January 2009
Indian court issues notice to retrieve Kachchatheevu கச்சத்தீவை மீட்க - உச்சநீதிமன்ற நோட்டிஸ் - நன்றி செல்வி.ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில்
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்ககோறி தொடர்ந்த வழக்கில்
உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது,
இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த கச்சத் தீ்வை சிறிலங்காவிற்கு தாரை வார்த்தது அரசமைப்புச் சட்டப்படி தவறானது என்றும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமது நாட்டின் ஒரு பகுதியை வேறொரு நாட்டிற்கு வழங்குவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்றும், எனவே இந்தியா-சிறிலங்க அரசுகளுக்கு இடையே கையெழுத்தான அந்த ஒப்பந்தம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் வாதிட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்
மீனவன் செத்தாலும் ஈழத்தவன் செத்தாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.... தமிழர்களின் நிலத்தை தமிழர்களை இந்தியர்கள் இலங்கைக்கு வாரிவழங்கியதிலிருந்தே தமிழ்மண்ணின் மீதான இந்தியர்களின் எண்ணம் புரிந்ததே
இந்த பிரச்சினையை உச்சநீதிமன்றம் வரை எடுத்து சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment